3/11/11

தொடரும் துணுக்குகள்

மெடாஃபிட்லரில் அனைவரும் படித்தாக வேண்டிய புத்தகங்கள்: சுவையான பட்டியல்.

தொடரும் இணைய இதழ் அறிமுகத்தில் - கார்த்திகா ரிவ்யூ : தெற்காசிய எழுத்தாளர்களின் படைப்புகள். ஸ்ருதி சுவாமியின் கருப்பு நாய் என்ற சிறுகதை இங்கே.

கோடை.

உமியாய் புழுதி வாரியிரைக்கிறது காற்று.
அனைத்துக்கும் வரிசையில் நிற்கிறோம்.
வயதாகியிருந்தாலென்ன, அனாதையாயிருந்தாலென்ன. பலமற்றவர்கள்

கோழிகளைப் போல் வேலிக்குள்.
எதையாவது செய்து கொண்டேயிரு. மாற்ற முடியாததை யோசிக்காதே.

குளிர் காலம்.

தரையின் பிளவுகளை ரேஷன் டின் மூடிகளால் மறைக்கிறோம்
மலைகளின் உயர்ந்தெழும் வெண் சுவரன்றி வேறில்லை கிழக்கில்

முள் வேலி.

என்று துவங்குகிறது கத்லீன் ஹெல்லெனின் மன்ஜனார் என்ற கவிதை.