6/11/11

இலக்கிய கோட்பாடுகள் - ஒரு எளிய அறிமுகம்

இலக்கிய கோட்பாடு என்பது எதுவாக இருக்கிறது, அல்லது இருந்தது? ஏன் நமக்கு கோட்பாட்டைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது? நாம் எங்கே நிற்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் கோட்பாட்டை வெவ்வேறு சித்தாந்தங்களின் அருவ தொகுப்பாக நினைக்காமல், அதை உண்மையாகவே நிகழ்ந்த ஒன்றாக வாசிக்க வேண்டும்: அது தனக்கென்று ஒரு வரலாற்றுச் சித்திரத்தை விட்டுச் செல்லும் உயிர் சுழல். அதன் நினைவுகளும், அது தன்னைக் குறித்து பதிவு செய்துள்ள விவரணைகளும் அவ்வாறு வாசிக்கப்படலாம். அப்போது இலக்கியக் கோட்பாட்டின் வாழ்வும் மரணவாழ்வும் நிலையாய் நிற்கும் அடையாளக் குறிகளைக் கொண்டு புரிந்து கொள்ளப்பட முடியும்: முக்கியமான கலந்துரையாடல்களும் பிரசுரங்களும்; அவை தேசிய அளவில் பெற்ற வெவ்வேறு வகை வரவேற்பும்; தாக்கத்தை ஏற்படுத்திய அமைப்பு சார்ந்த வட்டங்களும். இப்படி செய்யும்போது, வடிவமின்றி மிதக்கும் சித்தாந்தங்களின் உலகம் நிஜ உலக மனிதர்கள், இடங்கள், நிகழ்வுகள் என்ற தொடர்பு எல்லைக்குள் சிக்கிக் கொள்கிறது. இப்படிப்பட்ட ஒரு விவரிப்பை முன்வைத்து இந்த பாடத் திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது.
என்று துவங்குகிறது இந்த சுவையான கட்டுரை. கதை கவிதைகள் இலக்கியவாதிகளால் பேசப்பட்டாலும் நம்மைப் போன்ற பாமரர்களின் கண்களில் பட்டு வாயில் விழுந்து எழுந்திருக்காமல் தப்புவதில்லை. கோட்பாடுகளை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும்? படித்துப் பாருங்கள்.

இரண்டு முக்கியமான விஷயங்கள்: கோட்பாட்டு விமரிசனத்தின் காலம் முடிவுக்கு வந்து விட்டது என்று நினைக்கிறேன்; இப்போது ஸ்பெகுலேடிவ் ரியலிசம் என்ற புதிய கோட்பாடு பரவலாக கவனிக்கப்பட்டு வருகிறது.