12/9/12

விமரிசன சுதந்திரம்

ஒரு விமரிசகனுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதை வெவ்வேறு கோணங்களில் பேசினாலும், இந்தக் கட்டுரையில் எனக்குப் பிடித்த பத்தி இது. யதார்த்த உண்மையைப் பேசுகிறது, நாம் இதை ஏறத்தாழ மறந்தே போய் விட்டோம்:
"விமரிசகனின் எழுத்தைப் பதிப்பிக்கும் இதழ், செய்தித்தாள் அல்லது இணையதளத்துக்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அங்கு பதிப்பிக்கப்படும் விஷயங்களுக்கு ஒத்திசைந்தும் முரண்பட்டும் பல்வேறு தராதரங்களின் அடிப்படையில் அது தன் தீர்ப்புகளை மறுவினையாகத் தருகிறது. அங்கிருக்கும் தர அளவுகோல்களைக் கண்டுகொள்ள மாட்டேன் என்று விமரிசகன் சொல்லிவிட முடியாது. களையைக் களையல்ல என்று சொல்லும் சுதந்திரம் அவனுக்குக் கிடையாது. ஆனால், இந்தத் தர விழுமியங்களைக் கையாண்டு அவன் அவற்றைத் திருத்தி எழுத முடியும். அந்தப் பத்திரிகையில் எழுதும் ஏனைய விமரிசகர்களுடனான உரையாடலால் இது சாத்தியப்படுகிறது. ஒரு புத்தகம் ஏன் உருப்படியாக இருக்கிறது, அல்லது இல்லை என்று சொல்வதற்குத் தேவையான தர அளவீடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருக்கிறது. இங்கு அவன் மதிப்பீட்டுக்கான விழுமியங்களைத் தரம்பிரித்துப் பார்க்கிறான் என்று சொல்லலாம். தேவைப்பட்டால் அவன் புதிய மதிப்பீடுகளைக்கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவன் எதையெல்லாம் தரம் என்று தேர்ந்தேடுக்கிறானோ, அதுவெல்லாம் அவன் எழுதும் பத்திரிகையின் வாசகர் தரத்தை வரையறுக்க உதவுகின்றன - அவனது தர அளவீடுகள் சில வாசகர்களை ஈர்க்கின்றன, சிலருக்கு விலக்கம் தருகின்றன"
யாருக்குதான் தரம் குறித்த அக்கறை இல்லை? அதைத் தீர்மானிக்கும் அடிப்படை விழுமியங்கள் இல்லை? ஆனால் அவை வெளியே சொல்லப்படுவதில்லை, சொன்னால் அது ஒரு மனச்சாய்வு, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நிலைப்பாடு என்றெல்லாம் திட்டுவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை, யாரானாலும் ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு நிலைப்பாடு உண்டு, அதை அறிந்துகொண்டேதான் அங்கு எழுதுபவர்கள் எழுதுகிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது மேற்கண்ட கட்டுரை.