18/1/14

ஒரு புத்தகத்தின் ஆற்றல் - அங்கே

ஒரு நாவலில் இடம் பெற்ற ஓவியம். அந்த ஓவியத்தை இரவல் வாங்கி ஒரு ம்யூசியம் பார்வையாளர்களின் கண்காட்சிக்கு வைக்கிறது - சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில், நாவல் பற்றியெல்லாம் எதுவும் தெரியாமலேயே. அந்த ஓவியமும் புகழ் பெற்ற ஓவியமோ ஓவியர் வரைந்ததோ அல்ல.


அக்டோபரில் துவங்கிய கண்காட்சி. இன்றும் ஓவியத்தைக் காண ஜீரோ டிகிரிக்கும் குறைவான குளிரில் மணிக்கணக்காக மியூசியத்துக்கு வெளியே வரிசையாக நின்று கொண்டிருக்கிறார்கள் வாசகர்கள். இதுவரை இரண்டு லட்சம் பேர் வருகை தந்திருக்கிறார்களாம், சொல்கிறது செய்தி. 


இதை எழுதிய டோனா டார்ட் பற்றி தமிழில் யாருக்காவது தெரிந்திருக்குமா என்னவோ, அஜய் புண்ணியத்தில் ஆம்னிபஸ் வாசகர்கள் மட்டுமாவது இவரை அறிந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.