4/6/11

பெண்ணிய எழுத்து

மீண்டும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விட்டது, சரி செய்ய முயற்சி செய்கிறேன்.

-----------

வி எஸ் நைபால் தனக்கு சரிநிகராக எழுதக் கூடிய பெண் எழுத்தாளரே கிடையாது என்று சொல்லிவிட்டதாகப் படித்தபோது அவர் தன் சமகால எழுத்தாளர்களைதான் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியல்ல- ஜேன் ஆஸ்டன் போன்ற ஆதர்சங்களை எல்லாம் தன் கணக்கில் சேர்த்துக் கொண்டு போட்டுத் தள்ளியிருக்கிறார்.

அவர் கூறியிருப்பதில் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது, "தன் வீட்டிலேயே சர்வ அதிகாரமும் கொண்ட எஜமானியாக இல்லாத நிலை ஒரு பெண்ணின் எழுத்திலும் தவிர்க்கமுடியாத வகையில் வெளிப்படுகிறது," என்று சொல்லியிருக்கிறார் அவர்.

பெண்களின் எழுத்தில் அவருக்குத் தென்படுகிற மிகையுணர்ச்சி (செண்டிமெண்டாலிட்டி) மற்றும் உலகை நோக்கிய குறுகிய பார்வை ஆகியவையே பெரும்பாலானோரின் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. அதற்குக் காரணமாக அவர் சுட்டுகிற சுதந்திரமின்மை பெண்ணியக் குரல்களுக்கு வலு சேர்ப்பதாகத்தானே இருக்க வேண்டும்?

ஒரு கேள்வி: தன் தனிப்பட்ட வாழ்வில் கையாலாகாதவனாக இருக்கிற ஒருவரது மனநிலை, ஆளுமை சார்ந்த உளவியல் பிரச்சினைகள், அவரது எழுத்தில் தவிர்க்க முடியாதபடி வெளிப்படுமா?

எழுத்து வாழ்வை பிரதிபலித்தால் போதுமானது என்று சொன்னால், அப்படியிருந்தாலும் தவறில்லை. ஆனால், எழுத்து வாழ்வின் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், இது சிக்கலான விவாதம்தான்.