8/10/11

மோசக்கார உலகம்

ஏய்த்தல் குறித்த ஒரு புத்தக விமரிசனம் படித்தேன். அதில் உள்ள ஒரு இயற்கை நிகழ்வு குறித்த விபரம் இங்கிருக்கிறது.

விஷயம் இதுதான். ப்ளிஸ்டர் பீட்டில்கள் என்று ஒரு வகை பூச்சிகள் உள்ளன. இவற்றின் லார்வாக்கள் ஒன்று கூடி ஒரு பெண் தேனீயைப் போன்ற தோற்றம் தருகின்றன, அது மட்டுமல்ல, அதன் pheramoneஐயும வெளிப்படுத்துகின்றன. இந்தப் பெண் தேனீயைக் கூட ஆசையுடன் பறந்து வரும் ஆண் தேனீக்களைப் பற்றிக் கொள்கின்றன. இந்த லார்வாக்களின் எடை தாளாமல் விழும் ஆண் தேனீ, தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது. ஆனாலும் சில பீட்டில்களை அவற்றால் அகற்றவே முடிவதில்லை. இந்த ஆண் தேனீ மெய்யான பெண் தேனீயைக் கூடும்போது,  ப்ளிஸ்டர்கள் பெண் தேனீயைத் தொற்றிக் கொண்டு, அதன் கூட்டுக்குள் போய், தேனீக்கள் கொண்டு வரும் சாப்பாட்டை உண்டு வளர்கின்றன!

இயற்கை எவ்வளவு கேவலமாக இருக்கிறது பார்த்தீர்களா, மனிதனைத் திட்டி என்ன பிரயோசனம்?

இதையெல்லாம் தன் புத்தகத்தில் எழுதியிருக்கிற ஆசியரிடம், ஒத்திசைவு (empathy) பற்றி நீங்கள் எழுதவேயில்லையே என்று கேட்டால், ஏயப்பதில் இந்த ஒத்திசைவு உணர்வுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கிறது, இதைப் பற்றி நான் ஏன் (குரு) பில் ஹாமில்டனிடம் "ஒத்திசைவு பற்றி என்ன சொல்வாய் பில்?" என்று கேட்டேன், அதற்கு அவர், "எம்பதியா? அப்படி என்றால்?" என்று கேட்டார், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்கிற மாதிரி, அதனால் நான் அதை அத்தோடு விட்டேன் என்கிறார்.

முன்னமே சொன்ன மாதிரி, மனிதர்களைச் சொல்லிக் குற்றமில்லை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நூறு ப்ளிஸ்டர் பீட்டில்கள்கள் இருக்கின்றன போலும்.