17/12/11

இரு கட்டுரைகள்

நல்ல நாளிலேயே மனிதன் நாலையும் யோசித்துக் கொண்டிருப்பான், உலகைக் குறித்து, மனிதர்களைக் குறித்து, உறவுகளைக் குறித்து என்று. அந்த எண்ணங்கள் அவனது வாழ்க்கையை பாதிப்பதாக இருக்கும் என்பதை சொல்லவே வேண்டும். எண்ணங்கள் செயல்களின் ஒத்திகை என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஆனால், சிந்திப்பதே, கற்பனையே ஒரு மனிதனின் தொழிலாகப் போய் விட்டால், அவன் மற்ற மனிதர்களைப் போல் இருப்பது கடினம். கற்பனையால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிலிப் கே டிக். பாதிக்கப்பட்ட என்று நாம் சொல்கிறோம், ஆனால் செறிவடைந்த ஒருவர் என்றும் சொல்லலாம்: அவரது எழுத்துகள் எவ்வளவு ஆற்றல் மிகுந்தவையாக இருக்கின்றன. அவர் தனது மனமயக்கங்களை லட்சக்கணக்கான சொற்களில் எழுதியுள்ளார். அவற்றுள் சில ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளது.

பிலிப் கே டிக் பற்றிய அந்த மதிப்புரை இங்கே.


ஒரு வகை புத்தக விமரிசனம், அந்தப் புத்தகம் எதைச் சொல்கிறது, எப்படிச் சொல்கிறது, அவை குறித்த விமரிசகரின் கருத்துகள் என்ன என்பது. இன்னொரு வகை விமரிசனம் அதைவிட கொஞ்சம் புதியது, நுட்பமானது- ஜெப் டயரின் இந்த மதிப்புரையைப் பாருங்கள். தான் விமரிசிக்கும் நாவல் வாழ்க்கையை எப்படி பார்க்கிறதோ, எப்படி விவரிக்கிறதோ, அதே பார்வையில் அந்த நாவலையும் அணுகியிருக்கிறார் டயர். நாவல் எதைப் பேசுகிறதோ, அது இந்தக் கட்டுரை வழியாக நமக்குக் கிடைத்து விடுகிறது.