14/4/11

சுருங்கச் சொல்

"ஏன் நீ சின்னஞ் சிறு பாடல்களாய்ப் பாடுகிறாய்?" என்று ஒரு பறவையைக் கேட்டானாம் ஒருவன், "உன்னால் நீண்ட நேரம் பாட முடியாதா?"
அதற்கு அந்தப் பறவை சொல்லிற்று, "என் பாடல்கள் எண்ணற்றவை. அவை அனைத்தையும் நான் பாட வேண்டும்," என்று.
தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகளை எழுதிய செகாவ் சொன்னது இந்தக் கதை-

"உன் கதைகளை எவ்வளவு சிறியதாக எழுத முடியுமோ அவ்வளவு சிறியனவாக எழுது. நான் மட்டும் மில்லியனராக இருந்தால் என் கதைகள் உள்ளங்கை அளவே இருக்கும்" என்கிறார் அவர்.

நல்ல அறிவுரை. இங்கே படித்தேன்: செகாவ் மேற்கோள்கள்

நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்- வளங்கள் பல கண்டு வாழ்வில் வெற்றி பெற்று மகிழ்வும் நிறைவும் காண ஆண்டவன் தங்களுக்கு அருளட்டும்.