12/8/11

"ஒற்றை அடியில் வீழ்த்திச் சாய்க்க வேண்டும்"

நேற்று படித்ததில் Georges Simenon குறித்த இந்த மேற்கோள் நன்றாக இருந்தது, நேர்மையாக இருந்த காரணத்தால்:

"எழுத்தாளன் என்பவன் இல்லை," என்கிறார் அவர் தன் வாசகர்களிடம். "புதினமும் வாசகனும் மட்டுமே உள்ளனர். எந்த அளவுக்கு அந்தப் புதினம் வாசகனால் எழுதப்பட்டதாகத் தோற்றமளிக்கிறதோ அந்த அளவுக்கு அது சிறந்த புதினமாகிறது. நாவல் என்பது சிறியதாக இருக்க வேண்டும், ஒரு அமர்வில் படித்து முடித்துவிடக் கூடியதாக இருக்க வேண்டும். அது ஆவணமாக இருக்கக் கூடாது, அது மிகைப்படுத்தப்பட்ட சித்திரமாக இருக்கக் கூடாது. அது தன் வாசகனை வலுவான ஒரு ஒற்றை அடியில் வீழ்த்திச் சாய்க்க வேண்டும்". கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் தான் சொல்வது ஏமாற்றமாயிருக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்தவராய் சிமெனோன் தொடகிறார், இந்த இலக்கியக் கொள்கைகள் தன் நாவல்களைத் தவிர மற்ற எவை குறித்தும் உண்மையாகாது என்று.

ந்யூ யார்க்கரில் பிரெண்டன் கில், A Different Stripe — Simenon on the Novel