26/2/11

அரசியலும் இலக்கியமும்

இயன் மக்ஈவன் ஜெருசலேம் இலக்கிய பரிசைப் பெற்றுக் கொண்டு ஆற்றிய ஏற்புரை பற்றி எழுதியிருந்தேனல்லவா, அதற்கு இங்கிலாந்தில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன:
உள்ளபடியே சொல்வதானால், தனது கண்டிக்கத்தக்க கருத்துகளின் மூலம் மக்ஈவன் மேயர் நீர் பர்கத்துக்கு பொன் மேடை அமைத்துத் தந்து விட்டார். "அனைவரும் சுதந்திரமாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள" ஜெர்சலேம் நகரில் இடம் கிடையாது. களப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். இனவாத உள்துறை சட்டங்களை நடைமுறைப்படுத்தி ஜெனீவா கன்வென்ஷனுக்கு எதிராக நகராட்சி நிர்வாகம் சட்டத்துக்குப் புறம்பான குடியமர்வுகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது- பாலஸ்தீனிய அரசின் தலை நகராக கிழக்கு ஜெருசலேம் அமையக் கூடாதென்று திட்டமிட்டு இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கார்டியனில் விரிவான செய்தி இருக்கிறது.

இங்கே அமைதியான சூழலில் நாம் எழுதவும் படிக்கவும் நேர்கிறது என்பது மிகப் பெரிய கொடை என்பதை நாம் ஒரு போதும் மறக்கக் கூடாது. எழுத்தும் அரசியல்தான் என்ற நிலை இங்கில்லை.

இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும்போது நெஞ்சம் கனக்கிறது என்பதை சொல்லாமல் இருக்க முடியாது- இவர்களின் ஒவ்வொரு தேர்வும் சிக்கல்கள் நிறைந்த ஒன்று- The Millions: In the Room: Against a Cultural Boycott of the Galle Literary Festival