25/2/11

மனசில் உள்ளதைப் பேசடா! - ஷேக்ஸ்பியர் எழுதாத நாடகம்

காட்சி ஒன்று: ரோமியோவை வசை பாடுதல்
(ஹாம்லெட்டும் ரோமியோவும் நுழைகிறார்கள்)

ஹாம்லெட்:


பித்தலாட்டக்காரா! மூடா! அப்பன் இல்லாதவனே! அரைக் கிறுக்கா! கோழை! நாற்றம் பிடித்த தடியா! அழகான பணக்கார வீர நாயகனுக்கும் உனக்கும் இடையில் உள்ள வேறுபாடளவுக்கு உள்ளதடா உன் மக்கு புத்தி! மனசில் உள்ளதைப் பேசடா!

தடித்த சிறுத்த பொதித்த துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பழைய அழுகிய சிக்குப் பிடித்த உன் கோவணம் மொத்தத்தின் கூட்டுத் தொகைக்கும் அழகிய இனிய அமைதியான இளவெயில் பொழுதுக்கும் இடையுள்ள வேறுபாடளவுக்கு உள்ளதடா உன் வீரம்! நறுமணம் வீசும் செக்கர் சிவந்த ரோஜாவுக்கும் என் தகப்பனுக்கும் உண்டான கூட்டுத் தொகைக்கும் உனக்கும் இடையுள்ள வேறுபாடளவுக்கு உள்ளதடா உன் ஆரோக்கியம்! மனசில் உள்ளதைப் பேசடா!

உன் மொத்தத்தின் கூட்டுத் தொகைக்கும் ஒரு மகோன்னத பெருமை கொண்ட பேரரசுக்கும் குதிரைக்கும் உண்டான கூட்டுத் தொகைக்கு இடையுள்ள வேறுபாடளவுக்கு உள்ளதடா உன் கோழைத்தனம்! மனசில் உள்ளதைப் பேசடா!

மனதில் உள்ளதைப் பேசடா!

(ரோமியோ வெளியேற்றம்)

என்ன இது என்று திகைக்கிறீர்களா நண்பர்களே?

இதுதான் செகப்பிரியர் கணிப்பொறி ஆணை மொழி!-{ The Shakespeare Programming Language (SPL) } - ஷேக்ஸ்பியர் போல் வசனம் எழுத முயற்சி செய்கிறது கணினி:

இது குறித்தெல்லாம் மேலும் படித்து இன்புற இங்கே செல்லுங்கள்.

தகவலுக்கு நன்றி- Conversational Reading