17/5/11

அர்த்தங்களே கலையின் இயல்பு...

எழுத்து குறித்த நல்ல கட்டுரை, ஒருவரை நோக்கி எழுதப்பட்டிருந்தாலும் இது அனைவருக்கும் பொருந்தக் கூடியது - ஓர் ஈழ எழுத்தாளருக்கு...
கலையின் பரப்பு எப்போதுமே கிரேஃபீல்ட் எனப்படும் பகுதிகளால் ஆனது. தெளிவு அல்ல தெளிவின்மையே கலையின் இயல்பு. அர்த்தம் அல்ல அர்த்தங்களே அதன் இயல்பு. அது சொல்வதில்லை உணர்த்துகிறது. அது சிந்தனையின் விளைவல்ல சிந்திக்கவைக்கும் ஒரு மொழிக்களம் மட்டுமே.

கருத்துக்கள், கொள்கைகள், நிலைபாடுகள் போன்ற பெருவெட்டான விஷயங்களால் ஆனதல்ல கலை. அது சிறிய விஷயங்களாலானது. நுண்மைகளால் மட்டுமே கட்டமைக்கப்படுவது. கலை ஒரு கலைஞனின் சிருஷ்டி அல்ல. அவன் தன்னை மீறிய விஷயங்களுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பதன் விளைவு.....
படித்துப் பாருங்கள், இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கிறது-
இலக்கியம் மொழியாலானது. உணர்ச்சிகள் எண்ணங்கள் மட்டுமல்ல படிமங்களும்கூட இங்கே மொழிதான்.

மொழியின் ஒழுங்கே வேறு. ஒரு எண்ணத்தை அல்லது ஒரு நறுமணத்தை மொழிக்குள் கொண்டுவருவதற்கான சவாலென்பது இரவுபகலில்லாமல் மொழியை மட்டுமே அளாவிக்கொண்டிருப்பதனால்தான் கைகூடும். ஒரு சிந்தனை அல்லது உண்ர்வு எழுந்தாலே அது மொழிவடிவமாக மனதில் எழுவதற்குப்பெயர்தான் இலக்கியத்தேர்ச்சி.