17/5/11

மனம் என்னும் மேடை மேலே...

ஈர்ப்பு என்று வந்தால், காதல் என்று வந்தால், எல்லாரும் ஒரே குட்டையில்தான் இருக்கிறோம். யூரிபிடிஸ், சொபோக்லஸ், ஷேக்ஸ்பியர், செகாவ், ஸ்ட்ரின்ட்பர்க், அனைவரும் ஒவ்வொரு தலைமுறையும் எதிர்கொண்டு தன் வழியில் புலம்பும் அதே தீர்க்க முடியாத பிரச்சினைகளோடுதான் போராடினார்கள்.  நான் அவற்றை ஒரு குறிப்பிடதத்தக்க கோணத்தில் என் திரைப்படங்களில் விவரித்து, அவற்றை வைத்து மகிழ்வித்தேன். மற்றவர்கள், தங்கள் காலத்தில், தங்கள் பேச்சுவழக்குகள் மற்றும் குறியீடுகளால் அதையே செய்தார்கள். 
என்னிடம் இருப்பது வேறு வகை ஒப்பனை சாதனங்களாக இருக்கலாம், ஆனால் முடிவில் பார்த்தால் நாம் அனைவரும் ஒரே விஷயத்தைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறோம். இதனால்தான் நான் அரசியலைப் படமெடுக்கவில்லை. வாழ்க்கையில் நிலைத்து நிற்கும் பிரச்சினைகள் அரசியல் அல்ல-  நம் பிரச்சினைகள் இருப்பு சார்ந்தவை, அவை உள்ளம் சார்ந்தவை, அவற்றுக்கு விடை கிடையாது- எப்படியானாலும் நமக்கு திருப்தி தரக்கூடிய விடை கிடையாது. 
Woody Allenஐ ஒரு பொருட்படுத்தத்தக்க எழுத்தாளராக நினைக்காதவர்கள் இருக்கலாம், ஆனால் அவரது திரைப்படங்கள் குறித்த கருத்து இருக்க வேண்டும் என்பது சிந்தனையாளனுக்கான அடையாளங்களில் ஒன்றாகும். அவர் தனக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களைப் பட்டியலிடுகிறார் இங்கே-