15/5/11

ஆர் கே நாராயண் நினைவு அஞ்சலி

மறைந்த தமிழ் எழுத்தாளர் ஆர் கே நாராயண் அவர்களுடைய பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இங்கிலாந்தில் உள்ள கார்டியன் என்ற நாளேட்டில் ஒரு அஞ்சலி கட்டுரை எழுதியிருக்கிறார், மார்லோ மற்றும் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதிய Charles Nicholl.
மால்குடி கதைகள் மெல்ல நீளும் தென்னிந்தியத் தொலைக் காட்சித் தொடர்கள். சிற்றூர்களுக்குரிய சதித்திட்டங்கள் மற்றும் ஆசைகள் நிறைந்தவை. அவை 1980களில் வாரத் தொடராக தொலைகாட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டன. தொலைகாட்சித் தொடர்கள் அனைத்தையும் போலவே, இதற்கு எளிதில் அடிமையாகிவிட வாய்ப்பிருக்கிறது. மால்குடி வெறியராகவும் கூடும், ந்யூ யார்க் நகர அடெல்பி பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஜேம்ஸ் பென்னெல்லியைப் பாருங்கள்- "ஒழுங்குபடுத்தப்பட்ட இந்து உலகத்தின் வெளிப்பாடாக மால்குடி நகரம்" என்ற தலைப்பில் அவர் ஒரு ஆய்வு செய்திருக்கிறார், அதற்காக ஆர் கே நாராயண் கதைகளை ஆதாரமாகக் கொண்டு மால்குடியின் வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார் இவர். தனது ஆய்வை 1978ல் அமெரிக்க சமய அகாதெமியில் வாசித்திருக்கிறார். இந்த வரைபடம் மால்குடியின் செழுமை கூடிய மெய்ம்மைக்கு ஒரு சமர்ப்பணமாகும். அவ்வளவு ஏன், இந்த வரைபடமும்கூட மால்குடித்தனமான முயற்சியுமாகும். இந்த வரைபடத்தால் பென்னெல்லி மகிழ்ந்திருக்க வேண்டும், 1981ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது "மால்குடி நாட்கள்" என்ற தொகுப்பின் முன்னட்டையில் அவரது வேண்டுகோளின்படி இந்த வரைபடம் அலங்கரிக்கிறது.

"ஒழுங்குபடுத்தப்பட்ட உலகம்" என்று பென்னெல்லி அவதானித்த தன்மை, ஆர் கே நாராயணின் படைப்புகளை விமரிசனத்துக்கு உள்ளாக்கும் காரணமாக இருந்திருக்கிறது. இந்நாட்களில் நாராயணின் புகழ் கொஞ்சம் தோய்வடைந்திருக்கிறது- அவரது சுருக்கமான குரல் பட்டாசாய் வெடிக்கும் திறமைகள் மற்றும் அரசியல் களத்தில் செயல்படும் புதிய இந்திய புனைகதை உலகத்துக்குத் தொடர்பற்றதாக இருக்கிறது. வி எஸ் நைபால் அவரது எழுத்தில் உள்ள 'உறைதன்மை'யைப் பற்றி பேசியிருக்கிறார்; அவர் விவரிக்கும் உலகம் ஒரு fable ஆகும்- ஆனால் நைபால் நுட்பமாக ஒரு உண்மையை குறிப்பிருகிறார்- நாராயணின் கவனம் சமுதாய மாற்றத்தின் புறவெளியில் இருக்கவில்லை, மாறாக, "அதன் ஆழத்தில் நிகழும் சாமானிய வாழ்வை அவதானித்தார்- சின்னச்சின்ன திட்டங்கள், பெரியபெரிய பேச்சு, பற்றாக்குறை"- மால்குடிய சூழலின் அருமையான சுருக்கம்"
படித்துப் பாருங்கள்- இங்கிலாந்தில் இருக்கும் ஆங்கில நாளேடு ஒன்று நினைவு வைத்துக் கொண்டு ஆர் கே நாராயண் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்துவது பெருமையாக இருக்கிறது.