11/5/11

நினைவுகளின் மீட்பன்

திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தாகூர் விருது பெறும்போது தான் ஆற்றிய உரையின் தமிழ் வடிவைத் தன் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்- அதில் அவர் எழுத்தையும் நினைவையும் குறித்துப் பேசிய இந்த விஷயங்கள் என்னைக் கவர்ந்தன-
எழுத்தாளன் என்பவன் நினைவுகளின் சேகரிப்பாளன், மறதிக்கு எதிராக நினைவு மேற்கொள்ளும் கலகத்தை அவன் முன்னெடுத்துப் போகிறான்,

மறக்கப்பட்ட. மறக்கடிக்கப்பட்ட. அதிகாரம் அரசியலால் விலக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட நினைவுகளை மீள்உருவாக்கம் செய்வதும். நினைவுகளின் வழியே மனிதர்களை காலம் தாண்டி நிலை பெறச் செய்வதுமே எழுத்தாளனின் வேலை

நினைவுகள் வீரியமிக்க விதைகளைப் போன்றவை, அவை உரிய இடத்தில் ஊன்றினால் முளைத்துக் கிளைத்து வளர்ந்துவிடும் என்பதை எழுத்தாளன் அறிந்திருக்கிறான், அந்த வகையில் அவனும் ஒரு விவசாயியே, இயற்கை ஒரு போதும் கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொள்வதில்லை என்பதையே எழுத்தாளன் சுட்டிக் காட்டுகிறான்,

மலையின் நிழல் ஆற்று நீரில் படரும் போது மலையை தான் வீழ்த்திவிட்டதாக ஆறு ஒரு போதும் நினைப்பதில்லை,

மாறாக மலையை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வதாகவே கருதுகிறது, அப்படிதான் வாழ்வை தன் எழுத்தில் பிரதிபலிப்பு செய்கிறான் எழுத்தாளன்.

தாகூர் விருது பெற்ற திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நம் உளமார்ந்த வாழ்த்துகள்.

o0o0o0o0

இந்தப் பதிவை என் பெருமதிப்புக்குரிய டிவிட்டர் நண்பர் திரு @rsgiri அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் கேட்ட ஒரு கேள்விக்கு விடையை எப்படி சொல்வது என்று தெரியாமல் ஏறக்குறைய ஒரு மாத காலமாக முழித்துக் கொண்டிருந்தேன்- திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் உரையை மேற்கோள் காட்டுவது சுலபமாக இருக்கிறது- அது நான் சொல்லக்கூடிய எதையும் காட்டிலும் தெளிவாகவும், ஆழமாகவும் இருக்கிறது.


புனைவின் வேர்கள் நினைவில் - ஒத்துக்கறேன். நினைவின் வேர்கள் புனைவில் - கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன் @nan_triFri Apr 15 02:12:48 via web


நன்றி கிரி. நல்ல கேள்வி :)