8 Egyptian novelists share their ‘rules’ for writing | Al-Masry Al-Youm: Today's News from Egypt
இவர்களில் மிரால் அல் தகாவி சொல்கிறார்:
- எழுத்து ஒரு கனவு. உருகியோடும் சக்தி- உன் நினைவை நீங்குமுன் அதைப் பற்றிக் கொள்ள முயற்சி செய்.
- எழுத்து ஒரு எளிய காதல்- நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்களிடம் அது விசுவாசமாக இருக்கிறது, புகழையும் பணத்தையும் தேடுபவர்களிடமல்ல.
- எண்ணங்கள் அனைத்தும் முட்டாள்தனமானவை, நம்ப முடியாதவை, இரவல் வாங்கப்பட்டவை, துவங்கத் தகுதியற்றவை- நீ அவற்றை எழுதுவதன் முன் அப்படித்தான் தோன்றும்.
- சொல்ல வந்த எண்ணம் நிறைவு பெறவில்லை என்று ஒத்திப் போடப்படும் எழுத்து முழுமை பெறாது- மறைந்தே போகும்.
- எழுதத் துவங்கிய எதையும் முடிக்காமல் கைவிடாதே- கைவிடப்பட்டபின் அது உன்னிடம் திரும்பாது.
- எழுத்து பதிப்பாகும். ஆனால் பதிப்பித்தல் ஒரு எழுத்தாளனை உருவாக்குவதில்லை. நிறைய எழுது. அது பதிப்பிக்கப்படுமா என்பதைப் பற்றி கவலைப்படாதே.