19/7/11

எழுத்துக் கலை குறித்து எட்டு எகிப்திய எழுத்தாளர்களின் குறிப்புகள்

பிரமாதமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது, இருந்தாலும் மீண்டும் துவங்குவதானால் எங்கிருந்தாவது துவங்க வேண்டுமே- எப்படி எழுதுவது என்று சொல்லித் தருகிறார்கள் எட்டு எகிப்திய எழுத்தாளர்கள்:

8 Egyptian novelists share their ‘rules’ for writing | Al-Masry Al-Youm: Today's News from Egypt

இவர்களில் மிரால் அல் தகாவி சொல்கிறார்:


  • எழுத்து ஒரு கனவு. உருகியோடும் சக்தி- உன் நினைவை நீங்குமுன் அதைப் பற்றிக் கொள்ள முயற்சி செய்.
  • எழுத்து ஒரு எளிய காதல்- நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்களிடம் அது விசுவாசமாக இருக்கிறது, புகழையும் பணத்தையும் தேடுபவர்களிடமல்ல.
  • எண்ணங்கள் அனைத்தும் முட்டாள்தனமானவை, நம்ப முடியாதவை, இரவல் வாங்கப்பட்டவை, துவங்கத் தகுதியற்றவை- நீ அவற்றை எழுதுவதன் முன் அப்படித்தான் தோன்றும்.
  • சொல்ல வந்த எண்ணம் நிறைவு பெறவில்லை என்று ஒத்திப் போடப்படும் எழுத்து முழுமை பெறாது- மறைந்தே போகும்.
  • எழுதத் துவங்கிய எதையும் முடிக்காமல் கைவிடாதே- கைவிடப்பட்டபின் அது உன்னிடம் திரும்பாது.
  • எழுத்து பதிப்பாகும். ஆனால் பதிப்பித்தல் ஒரு எழுத்தாளனை உருவாக்குவதில்லை. நிறைய எழுது. அது பதிப்பிக்கப்படுமா என்பதைப் பற்றி கவலைப்படாதே.