21/7/11

குரலைப் பற்றி சில குறிப்புகள்

நினைவே W.G. Sebaldன் தவிர்க்க முடியாத கருப்பொருளாக இருக்கிறது: தேசங்களுக்கும் தனி மனிதர்களுக்கும் நினைவோடு வாழ்வது எப்படிப்பட்ட வலியாக இருக்கிறதென்றும் நினைவின்றி வாழ்வது எப்படிப்பட்ட ஆபத்தாக இருக்கிறதென்றும் எழுதுகிறார். அவரது புத்தகங்களின் கதை சொல்லிகள் தொடர்ந்து நினைவுறுத்திக் கொள்ளும் நிலையிலேயே வாழ்கிறார்கள்- Austerlitzன் கதைசொல்லியும் "The Emigrants"ன் அயல்வாழ்வின் நான்கு இணை கதையாடல்களும் கவனத்தை மிகவும் ஈர்ப்பனவாக உள்ளன. அனைத்தும் வேறொன்றாக உருமாறுகின்றன: இடங்களும், நபர்களும், அவர்களுடைய கதைகளும் அனுபவங்களும், இவையனைத்தையும்விட வெவ்வேறு காலங்கள் ஒன்றிலொன்று கசிந்து தங்கள் அடையாளங்களை இழக்கின்றன- பெரும்பாலும் நீண்ட, வேரற்ற பிறர் கூற்றை விவரிக்கும் பத்திகளில் இப்படி நேர்கிறது. "Vertigo"வின் கதைசொல்லி இந்த உத்தியின் சுருக்கமான விளக்கம் தருகிறார்: "வெகு தொலைவில் இருந்தாலும் ஒத்த இயல்பு கொண்ட நிகழ்வுகளுக்கிடையான இணைப்பை அறிதல்"
- டபிள்யு. ஜி. செபால்ட்

பட்டப்படிப்பை முடித்ததும் தான் கல்லூரியில் கட்டுரைகளை எழுதிய வடிவம் சரியான எழுத்தல்ல என்று Naipaul முடிவு செய்தார். திரும்பவும் எழுதிப் பழகத் துவங்கினார். இம்முறை எளிய, நேரடியான தகவல்களை மட்டுமே தன் எழுத்தில் பயன்படுத்தினார். ""மதில் மேல் இருந்தது பூனை" என்பது போன்ற வாக்கியங்களைத்தான் ஏறத்தாழ எழுதத் துவங்கினேன்". மூன்று ஆண்டுகள் இந்த விதியைக் கடைபிடித்தார். அண்மையில் ஒரு இந்திய செய்தித்தாளின் வேண்டுகோளுக்கேற்ப அவர் துவக்க எழுத்தாளர்களுக்கு ஏழு விதிகளைப் பட்டியலிட்டார்:

  1. பத்து முதல் பன்னிரெண்டு சொற்களைத் தாண்டாத வாக்கியங்களை எழுது.
  2. ஒவ்வொரு வாக்கியமும் ஒரு விஷயத்தைத் தெளிவாக சொல்லட்டும் (இப்படித் தொடரும் வாக்கியங்களாலானது ஒரு பத்தி)
  3. சிறிய சொற்களைப் பயன்படுத்து - உன் சொற்களில் சராசரியாக ஐந்து எழுத்துக்கள் இருக்கட்டும்.
  4. உனக்குப் பொருள் தெரியாத வார்த்தையைப் பயன்படுத்தாதே
  5. உரிச்சொற்களைத் தவிர்த்துவிடு- வண்ணம், அளவு, எண் இவற்றுக்கான உரிச்சொற்களை மட்டும் கையாள வேண்டும் (adjectives)
  6. உணர்வுகளால் அறியக்கூடிய விஷயங்களைச் சுட்டும் சொற்களைப் பயன்படுத்து, பொதுப்படையான, அருவ விஷயங்களைப் பேசாதே
  7. இந்த ஆறு விதிகளையும் ஆறு மாதங்கள் தினமும் தொடர்ந்து பழகு.

- நைபால்

விறுவிறுப்பாக எழுதுவதே Greeneன் சிறப்பு. த்ரில்லர், துப்பறியும் கதை போன்றவற்றை கிரீன் கேவலமாக நினைப்பதில்லை. தன் நாவல்களை "பொழுதுபோக்குகள்" என்று வகைப்படுத்தி தன் அத்தியாயங்களை அடுத்தது என்ன என்று நினைக்கும்படி முடிக்க அவர் அஞ்சவில்லை, இதை வர்ஜினியா வுல்பால் ஏற்றுக்கொண்டிருக்கவே முடியாது. ஸ்பெக்டேட்டரில் சினிமா விமரிசகராக இருந்த அனுபவத்தைப் பயன்படுத்தி திரைப்படங்களின் காலத்துக்குரிய இறுக்கத்துடன் நாடகீய மற்றும் நகைச்சுவை கதை சொல்லலை அவர் இணைத்து எழுதுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் நாவல்கள் முடிவில்லாமல் நீண்டன என்றால் க்ரீனின் ஆற்றல் அவரது சுருங்கச் சொல்லும் திறனில் இருக்கிறது- தன் நாவல்களை எண்பதாயிரம் வார்த்தைகளில் முடித்தார். நீங்கள் அவற்றை ஒரே அமர்வில் படித்துப் புரிந்து கொண்டுவிட முடியும். இது நாடகங்களின் ஒருங்கிணைந்த தன்மையை நாவல்களில் திரும்பப் பெறுகிறது. அவர் தன் தினப்படி லட்சியமான ஐநூறு சொற்களை எழுதி முடித்ததும் நிறுத்தி விடுவார் - வாக்கியத்தின் மத்தியிலும் கூட.
- க்ரஹாம் கிரீன்.

ஆங்கில இலக்கியத்தின் சில முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் மோர் இன்டல்லிஜண்ட் லைப்பில் இருக்கிறது. அறிமுகம் செய்பவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல.

இத்தொடர் இங்கே இருக்கிறது.