10/7/11

யோக்கியமான முயற்சிகள்

யோக்கியமான முயற்சிகள்

சுஜாதா தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகளுள் பதினெட்டை மட்டும் தொகுத்து ஒரு புத்தகம் பதிப்பித்துள்ளார். அதன் முன்னுரையில் அவர் எழுதியிருப்பது பால்ஹனுமான் ப்ளாகில் இருக்கிறது:

"நான் பார்ப்பதையும் உணர்வதையும் என்னால் இயன்ற அளவுக்கு எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்வதுதான் என் குறிக்கோள்!" என்று எர்னஸ்ட் ஹெமிங்க்வே ( Ernest Hemingway) சொன்னதுடன் எனக்கு சம்மதம். ”ஒரு எழுத்தாளன் கடவுள், அவநம்பிக்கை போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலக் கூடாது. அவன் தொழில் கடவுளைப் பற்றியும் அவநம்பிக்கைகளைப் பற்றியும் நினைப்பவர்களை வர்ணிப்பது என்று செக்காவ் ( Chekov) ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அவரே மற்றொரு கடிதத்தில் “பிரச்னைக்குத் தீர்வு காண்பதையும் பிரச்னை என்ன என்று சொல்வதையும் குழப்பாதே; ஒரு கலைஞனுக்குப் பின்னதுதான் கட்டாயமானது” என்கிறார்.

இந்தப் பதினெட்டு கதைகள் எவற்றிலும் நான் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயலவில்லை. பிரச்னைகளை ஒழுங்காக விவரிப்பதில்தான் — சொல்லுவதில்தான் அக்கறை காட்டியுள்ளேன். இயன்ற அளவுக்கு எளிதாகவும், சிறப்பாகவும் என்னால் கவனிக்க முடிகிறது. காட்சிகளை வித்தியாசமாகப் பார்க்க முடிகிறது. அதைத் தமிழில் எழுத முடிகிறது. இந்த மூன்று தகுதிகளையுமே நான் முழுமையாகப் பெற்றிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். பெற்றுவிட்டால் எழுதுவது எல்லாமே சிறந்ததாக இருக்க வேண்டும். இல்லை. இவை சிறந்த கதைகள் இல்லை. சிறந்த கதைகளை நோக்கிய என் யோக்கியமான முயற்சிகளின் அத்தாட்சிகள்..."

மிகவும் ரசித்துப் படித்த பதிவு.

பால்ஹனுமான் ப்ளாகுக்கு என் நன்றிகள்.